states

img

உ.பி: அமினாபாத் பள்ளியில் மதவெறி திணிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அமினாபாத் பள்ளியில் மாணவர்களுக்கு மதவெறியை வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மாநகராட்சிக்கு கீழ் இயங்கும் அமினாபாத் இன்டர் காலேஜ் பள்ளியில், ஆங்கில எழுத்துக்கள் கற்பிக்க புராண பெயர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. 'A for Apple, B for Ball, C for Cat...' என்பதற்கு பதிலாக ’A for Arjuna, B for Balarama, C for Chanakya...' என்று மாணவர்கள் மத்தியில் மதவெறி திணிக்கப்படுகிறது.
இது குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போது, மாணவர்களிடையே இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்த இது போன்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.