உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அமினாபாத் பள்ளியில் மாணவர்களுக்கு மதவெறியை வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மாநகராட்சிக்கு கீழ் இயங்கும் அமினாபாத் இன்டர் காலேஜ் பள்ளியில், ஆங்கில எழுத்துக்கள் கற்பிக்க புராண பெயர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. 'A for Apple, B for Ball, C for Cat...' என்பதற்கு பதிலாக ’A for Arjuna, B for Balarama, C for Chanakya...' என்று மாணவர்கள் மத்தியில் மதவெறி திணிக்கப்படுகிறது.
இது குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போது, மாணவர்களிடையே இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்த இது போன்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.